புரியாத புதிர்

By moonrampirai

நீ ஒரு ந‌தி
மெளன‌மாக‌ செல்கிறாய்
ம‌ன‌தில் என்ன‌தான் நினைக்கிறாய்..?

நீ ஒரு சூரியன்
எப்பொழுதும் வெப்ப‌த்தையே கொடுக்கிறாய்
யார் மீது கோப‌ம்..?
நீ ஒரு நிலா
என் கூட‌வே வ‌ருகிறாய்
நான் உன்னை க‌ண்ட‌தும் வில‌கி செல்கிறாயே..?

நீ ஒரு விண்மீன்
நினைத்த‌தும் தோன்றுகிறாய்
பார்த்த‌தும் ம‌றைந்து விடுகிறாயே…?
புரியாத‌ புதிராய் இருக்கிறாய்
தெளிவாக‌ என்னை குழ‌ப்புகிறாய்
விரைவில் விடை சொல்ல‌டி..!

மறுமொழி இடுக